விருதுநகர் அருகே தீக்குளித்து உயிரிழந்த பெண்ணை உறவினர்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் திரவியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி(26). இவரது மனைவி கலைவாணி(21) குடும்ப பிரச்னையின் காரணமாக கடந்த டிச-7ம் தேதி இரவில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். இது தொடர்பாக உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் கலைவாணியின் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ரோசல்பட்டியைச் சேர்ந்த அப்பெண்ணின் தம்பி சேவியர்(21) என்பவர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் கணவர் பாலமுரளி(26), அவரது தந்தை பொன்னுச்சாமி(54), உறவினர்களான குமார்(38)மற்றும் ராஜா(35) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

